உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
சங்கராபுரம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி ஆனந்தி(வயது25). இவருக்கும் எதிர் வீட்டை சேர்ந்த விஜயகுமார் மனைவி நிஷாந்தி (26) என்பவருக்கும் கோழி மேய்ந்தது சம்பந்தமாக வாய்ச்சண்டை நடந்தது. இதன் முன்விரோதம் காரணமாக நிஷாந்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆனந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் நிஷாந்தி, அஞ்சலை, மீனா, திருமூர்த்தி ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிந்து உள்ளார். இவர்களில் திருமூர்த்திகைது செய்யப்பட்டார்.