உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2022-03-17 14:50 IST   |   Update On 2022-03-17 14:50:00 IST
சென்னிமலை அருகே காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்மடைந்தனர்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்மடைந்தனர்.

சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் ஊராட்சி 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (24). இவர் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

இவரது நண்பர் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள கே.கே. நகரில் வசித்து வருகிறார். நண்பர் வீட்டுக்கு அய்யப்பன் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது நண்பரின் வீடு அருகே வசித்து வந்த சவுந்தர்யா தேவி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு சவுந்தர்யா தேவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இதனால் காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 
சென்னிமலை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி இரு தரப்பு பெற்றோரையும் வரவ ழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இதில் சவுந்தர்யா தேவியின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளாததால் அய்யப்பனின் பெற்றோர் காதல் ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

Similar News