உள்ளூர் செய்திகள்
விளையாட்டு போட்டி

மாமல்லபுரம் கடற்கரையில் விளையாட்டு போட்டி

Published On 2022-03-16 12:21 IST   |   Update On 2022-03-16 12:21:00 IST
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கைப்பந்து, கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கடற்கரையில் நடந்தது.

மாமல்லபுரம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கைப்பந்து, கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கடற்கரையில் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜகதீஸ்வரன் வீரர்களை அறிமுகம் செய்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணியினருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், கோச்சர்கள் ஆணந்த், தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News