உள்ளூர் செய்திகள்
கோவிலம்பாக்கத்தில் வாலிபருக்கு வெட்டு- சிறுவன் உள்பட 5 பேர் கைது
ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்ய முயற்சி செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை:
நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ப்ரியன் (21). இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர் 3-வது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் விஷ்ணுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த விஷ்ணுபிரியன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோலை ராஜா, சந்தோஷ்குமார், சக்திவேல், ஆதம்பாக்கத்தை சேர்ந்த மணிமாறன் மற்றும் 8 வயதுக்குட்பட்ட சிறுவன் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர்.
ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விஷ்ணுவை கொலை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ப்ரியன் (21). இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர் 3-வது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் விஷ்ணுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பலத்த காயம் அடைந்த விஷ்ணுபிரியன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோலை ராஜா, சந்தோஷ்குமார், சக்திவேல், ஆதம்பாக்கத்தை சேர்ந்த மணிமாறன் மற்றும் 8 வயதுக்குட்பட்ட சிறுவன் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர்.
ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விஷ்ணுவை கொலை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது.