உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திருப்போரூர் அருகே தொழிலாளர்களை தாக்கி ரூ.20 ஆயிரம் கொள்ளை

Published On 2022-03-16 12:02 IST   |   Update On 2022-03-16 12:02:00 IST
திருப்போரூர் அருகே தொழிலாளர்களை தாக்கி ரூ.20ஆயிரம் கொள்ளை மர்மகும்பல் துணிகரம்


திருப்போரூர்-மாமல்லபுரம் சாலையில் உள்ள தண்டலம் பகுதியில் கடைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று இரவு வேலை முடிந்து அனைவரும் தூங்க சென்றனர். 11.30 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் இரவு திடீரென அங்கு வந்தனர்.

அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை எழுப்பி இரும்பு கம்பியால் சரமாரியாக தாங்கினர். பின்னர் அவர்களை மிரட்டி ரூ.20 ஆயிரம், ஒரு செல்போனை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் பிரேம் (வயது30) என்ற கொத்தனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News