உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் தின விழா நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் நடராஜன், சரஸ்வதி பள்ளியில் ஜே.சி. ஐ. கிரீன் சிட்டி சார்பில் மகளிர் தின விழா நடந்தது.
தலைவர் அமுதா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சுகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரேணுகாதேவி கலந்துகொண்டு சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய செயலாளர் வேதா செந்தில், பொருளாளர் ஈஸ்வரி ஆகியோரும், பள்ளி நிர்வாகமும் செய்திருந்தனர்