உள்ளூர் செய்திகள்
இளம்பெண்கள் மாயம்.

இளம்பெண்கள் மாயம்

Published On 2022-03-14 16:09 IST   |   Update On 2022-03-14 16:09:00 IST
விருதுநகர் அருகே இளம்பெண்கள் 2 பேர் மாயமானார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த 17வயதுடைய மாணவியை சம்பவத்தன்று அவரது பெற்றோர் படிக்கவில்லை என்று கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதில் விரக்தியடைந்த மாணவி திடீரென மாயமானார். 

ராஜபாளையம் சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர்சேர்வராயன். இவரது மகள் முனீஸ்வரி(19). தையல்கடையில் பணிபுரிந்து வந்த இவர் திடீரென மாயமானார்.  2சம்பவங்கள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன், சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News