உள்ளூர் செய்திகள்
பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார்.

பாம்பு கடித்து விவசாயி சாவு

Published On 2022-03-14 16:05 IST   |   Update On 2022-03-14 16:05:00 IST
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பாம்பு கடித்து விவசாயி பாதாபமாக இறந்தார்.
ராஜபாளையம் 

ராஜபாளையம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஆப்பனூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது69), விவசாயியான இவர் தனது நிலத்தில் நேற்றுமாலை வேலை பார்த்துக்கொண்டிருந்தார். 

அப்போது விஷபாம்பு கடித்தது. உடனே வேலுச்சாமி தனது மகனிடம் தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ்சுடன் சிறிதுநேரத்தில் அங்குவந்த அவரது மகன் வேலுச்சாமியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

அங்கு நிலையை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் வழியிலேயே வேலுச்சாமி பரிதாபமாக இறந்தார்.





Similar News