உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நோய் கொடுமையால் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர்
சாத்தூர் அருகே உள்ள பூசாரிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராக்குமுத்து(வயது50). கட்டிட தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமடையவில்லை.
இதில் விரக்தியடைந்த ராக்குமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.