உள்ளூர் செய்திகள்
தாயை வெட்டி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெற்றியூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சரஸ்வதி (வயது71). இவர்களுக்கு ரவிச்சந்திரன் (50) என்ற மகன் உள்ளார்.
ரவிச்சந்திரனுக்கும், தாய் சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த ரவிச்சந்திரனுக்கும், சரஸ்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அரிவாளால் சரஸ்வதியை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழப்பழூர் போலீசார், சரஸ்வதியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.