உள்ளூர் செய்திகள்
விருதுநகரில் சிறுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் கருப்பசாமி நகரில் 34வயதுடைய பெண் தையல்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் 2 வருடங்களுக்குமுன் இறந்து விட்டார்.
இதனிடையே அந்த பெண்ணுக்கும், அதே பகுதியைச்சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் தையல்கடைக்கு சென்ற வேல்முருகன் அங்கிருந்த பெண்ணின் 13 வயதுடைய மகளை சரமாரியாக தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்த புகாரின்பேரில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.