உள்ளூர் செய்திகள்
3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
திருபுவனை அருகே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கலித்தீர்த் தாள்குப்பம்-திருக்கனூர் ரோட்டில் செல்போனில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ் புக் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சாதாரண உடையில் சென்று கண்காணித்தனர். அப்போது 2 பேர் வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி முடிவுகளை செல்போனில் தெரிவித்துக்கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அய்யூர் அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு (வயது39) விழுப்புரம் சித்தேரி கரையை சேர்ந்த ராஜா(42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.