உள்ளூர் செய்திகள்
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-11 12:06 IST   |   Update On 2022-03-11 12:06:00 IST
காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

புதுவை காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முயற்சிகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை சங்க தலைவர் சபாபதி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஜெயசங்கர் மற்றும் மனோகர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளை செயலாளர் ஜனகர் நன்றி கூறினார்.

Similar News