உள்ளூர் செய்திகள்
பேனர்களை அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை-ஆணையர் எச்சரிக்கை
அரியாங்குப்பம் பகுதியில் பேனர்கள் அகற்றம்-மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு இடையூறாகவும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர், கட்-அவுட் வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் ஆணையர் ரமேஷிற்கு புகார் அளித்து வந்தனர்.
மேலும் உள்ளாட்சி துறை இயக்குனர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகி யோர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கட்-அவுட், பேனர்களை உடனடியாக அகற்ற நட வடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர் ரமேஷ் தலைமையில், தாசில்தார் குமரன் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கட்-அவுட், பேனர்களை அகற்றி வருகின்றனர்.
இப்பணியில் இளநிலை பொறியாளர் ரகுராமன், வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், கந்தவேல், இளநிலை எழுத்தர் செழியன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்ட னர்.
அரசு அறிவித்த உத்தர வின்படி மீண்டும் பேனர் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி நட வடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.