உள்ளூர் செய்திகள்
விமான சேவை

புதுச்சேரியில் இருந்து வருகிற 27-ந்தேதி முதல் விமான சேவை தொடக்கம்

Published On 2022-03-10 02:44 GMT   |   Update On 2022-03-10 02:44 GMT
புதுச்சேரியில் இருந்து வருகிற 27-ந்தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று காரணமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி, சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான முன் பதிவு நேற்று தொடங்கியது. இதன்படி பெங்களூரு, ஐதராபாத்துக்கு மீண்டும் விமான சேவை நடைபெற உள்ளது. வருகிற 27-ந்தேதி புதுச்சேரி வரும் விமானத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் வரவேற்கிறார்கள்.

ஐதராபாத்தில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 1.30 மணிக்கு புதுச்சேரியை வந்தடைகிறது. இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்படும் விமானம் 2.50 மணிக்கு பெங்களூருவை சென்றடைகிறது.

அங்கிருந்து 3.20 மணிக்கு புறப்படும் விமானம் 4.10 மணிக்கு புதுச்சேரி வருகிறது. புதுவையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் விமானம் 6.15 மணிக்கு ஐதராபாத்தை சென்றடைகிறது.
Tags:    

Similar News