உள்ளூர் செய்திகள்
மூலக்குளத்தில் கழிவுநீர் தகராறில் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது46). டிரைவர். இவரது வீட்டுக்கும் அதே பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவரின் வீட்டுக்கும் கழிவுநீர் வாய்க்கால் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் சம்பவத் தன்று மாலை அய்யனார் தனது வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை பார்த்து மீனாட்சி தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனை அய்யனார் தட்டிக்கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மீனாட்சி மற்றும் அவரது உறவினர்கள் சித்ரா, அவரது கணவர் புண்ணியக்கோடி மற்றும் நிலா ஆகிய 4 பேரும் சேர்ந்து அய்யனாரை கல்லாலும், கையாலும் தாக்கினர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அய்யனார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் அய்யனார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்