உள்ளூர் செய்திகள்
வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி- லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-03-09 12:49 IST   |   Update On 2022-03-09 12:49:00 IST
நரம்பை மீனவ கிராமத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின், கீழ் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட நரம்பை மீனவ கிராமத்தில் வீரன் கோவில் வாய்க்கால் ரூ.3.10 லட்சம் செலவில் தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பூமி பூஜையில் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நரம்பை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பல அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க படவில்லை என பொது மக்கள் கோரிக்கைக்கு இணங்க லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News