உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் பீச் கபடி போட்டி
புதுவையில் முதன்முதலாக பீச் கபடி போட்டி நடந்தது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் குயின் பேரடைஸ் பீச்சில் நடந்த பீச் கபடி போட்டியை புதுச்சேரி கபடி சங்க தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் டி.எம் வருண் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே தனித்தனியே போட்டிகள் நடைபெற்று. வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.
புதுவையில் முதல் முறையாக நடந்த இந்த பீச் கபடி போட்டி அடுத்து வரும் காலங்களில் மாநில அளவில் நடத்த சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்தப் போட்டியில், சாண்ட் டியூன் ஓட்டல் உரிமையாளர் ஜெயபிரகாஷ், புதுச்சேரி கபடி சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.