உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் மோதி முதியவர் பலி

Published On 2022-03-06 14:25 IST   |   Update On 2022-03-06 14:25:00 IST
கிழக்கு கடற்கரை சாலையில் பஸ் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

திருவிடந்தை அடுத்த தெற்குப்பட்டை சேர்ந்தவர் அர்ஜூனன்(வயது.67). தொழிலாளி. இவர் அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொன்டிருந்தார்.

அவர் சாலையை கடக்க திரும்பினார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து பற்றி அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து அர்ஜூனன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News