உள்ளூர் செய்திகள்
புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி- ரங்கசாமி தொடங்கி வைத்தார்
கதிர்காமம் தொகுதியில் ரூ. 63 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் தொகுதி மாரியம்மன் நகர் மற்றும் அதனை சார்ந்த விடுபட்ட பகுதிகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய் பதித்தல் மற்றும் சாலைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் ரூ.63 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. முதல்& அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமி நாராயணன், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பொது சுகாதார கோட்ட செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் உமாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.