உள்ளூர் செய்திகள்
கரையாம்புத்தூரில் தண்ணீர் திருவிழா
கரையாம்புத்தூரில் தண்ணீர் திருவிழா நடைபெற்றது.
புதுச்சேரி:
சின்ன கரையாம்புத்தூர் கிராமத்தில் தண்ணீர் திருவிழா நடை பெற்றது. விழாவில், ஊர் தலைவர் கோகுலா தலைமை தாங்கினார். உதவும் கரங்கள் நற்பணி மன்றம் தலைவர் தலைவர் பழனிவேல், அரசு ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், குளங்களை காப்போம் குழுவினர், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு அங்குள்ள நாச்சியர் அம்மன் கோவிலில் இருந்து கலச நீரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பின்னர் விலாமரம் குளத்தில் அதனை கலந்து குளத்து நீரை மீண்டும் கலசத்தில் விட்டனர். இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி, சாமுண்டீஸ்வரி, அரசு ஊழியர் சம்மேளன செயலளர் தாட்சாயணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.