உள்ளூர் செய்திகள்
3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் 512 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவை, காரைக் கால், மாகியில் தலா ஒருவர் என 3 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 2, காரைக் காலில் ஒருவர் என 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 5, காரைக்காலில் 6 பேர் என 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 742 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 736 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 25, காரைக் காலில் 13, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 41 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 44 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 95 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.