உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு சம்பத் எம்.எல்.ஏ. கோழி குஞ்சு வழங்கிய காட்சி.

மானிய விலையில் கோழி குஞ்சுகள்-சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2022-03-05 14:16 IST   |   Update On 2022-03-05 14:16:00 IST
முதலியார்பேட்டை தொகுதி பயனாளிகளுக்கு மானிய விலையில் கோழிக் குஞ்சுகளை சம்பத் எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி:

புதுவை அரசின் கால்நடை துறை சார்பில் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தினர் பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ள கோழி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. கோழிக்குஞ்சுகள் மானிய விலையில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. 

ஒரு கோழிக்கு ரூ.56 பயனாளிகளிடம் வசூலிக்கப் பட்டு ரூ.56   அரசு மானியம் வழங்குகின்றது. இத்திட்டத்தின் கீழ் முதலியார் பேட்டை தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 450 கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி முதலியார்பேட்டை எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் முதலியார் பேட்டை  சம்பத் எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கால்நடைத்துறை இயக்குனர் செல்வராஜ், இணை இயக்குனர் டாக்டர் குமரன், கால்நடை மருத்துவர் டாக்டர் கதிரேசன் ஆகியோர் செய்திருந்தனர். 

விழாவில் ஊர் பொது மக்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். பயனாளிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய மானியத் தொகையை சம்பத் எம்.எல்.ஏ. தனது பிறந்தநாளையொட்டி சொந்த செலவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News