உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2022-03-05 10:02 IST   |   Update On 2022-03-05 10:20:00 IST
ஆட்டோவில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

லாஸ்பேட்டை மடுவுபேட் சல்பனாசாவ்லா நகரில் கடை அருகே ஆட்டோவில் வைத்து 3  நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு நின்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாரம் வேலன் நகரை சேர்ந்த புருஷோத்தமன் (வயது45) மற்றும் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்த புகழேந்தி (20) என்பதும், இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆட்டோவில் வைத்து 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ-.5 ஆயிரத்து 800 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News