உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி:
மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடுமுடி அருகே பாசூர் வேங்கியாம் பாளையத்தை சேர்ந்தவர் கமலேஷ் (23) இவர் சம்பவத்தன்று இரவு பாசூரில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
சாஸ்த்திரி நகர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூரை சேர்ந்தவர் சக்திவேல் (32) இவர் தன் மனைவி சசிகலாவை (29) மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து மொடக்குறிச்சி அருகே உள்ள காகம் என்ற கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி சக்திவேல் எதிரே வந்த கமலேஷ் மோட்டார் சைக்கிளில் மீது மோதினார்.
இதில் கீழே விழுந்த கமலேஷ்க்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சசிகலா மற்றும் சக்திவேலுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கமலேஷ் இறந்து விட்டார் என கூறினர்.
மேலும் சக்திவேல், சசிகலா 2 பேரும் மேல் சிகிச்சைகக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் சசிகலாக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.