உள்ளூர் செய்திகள்
செவித்திறன் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு
ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி சார்பில் செவித்திறன் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறு படைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் இயங்கும் மறுவாழ்வு மற்றும் மருத்துவ உளவியல் கல்லூரி சார்பில் உலக செவித்திறன் தினம் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக புதுவை இந்திரா காந்தி சிலை சதுக்கத்தில் நடந்த உலக செவித்திறன் நிகழ்ச்சியை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தொடங்கி வைத்தார்.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி களுக்கு செவித்திறன் தொடர்பான விழிப்புணர்வு துண்டறிக்கையை வழங்கி னார்.
மேலும் செவித்திறன் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் அத்துடன் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் சாலையோரமாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ராஜன், செவித்திறன் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசுகையில், “காது கேளாமைக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது இரைச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரைச்சலால் காது கேட்காமல் போனால் அது நிரந்தரமாகும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவ சிகிச்சைகளி னாலும் பயன்தராது. அதே நேரத்தில் இந்த இரைச்சலை கட்டுப்படுத்தியும் எரிச்சலை தவிர்த்து செவித்திறனை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அதிக நேரம் மொபைல் போனில் இயர் போனை படுத்தி கேட்கும் போது அதன் செவித்திறன் பாதிக்கப்படும், அதனால் காது கேட்காமல் போகும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி இணைப்பதிவாளர் பெருமாள் செய்திருந்தார். உதவி பேராசிரியர் ஜான் நன்றி கூறினார்.