உள்ளூர் செய்திகள்
வானூர் பெண் பலி

வானூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2022-03-02 15:45 IST   |   Update On 2022-03-02 15:45:00 IST
வானூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வானூர்:

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்/ இவரது மனைவி அன்னபூரணி (வயது 52). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை புதுவையில் இருந்து திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து புதுவை நோக்கி திரும்பினர். மோட்டார் சைக்கிள் ஆரோவில் உள்ள போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட் டார் சைக்கிளை வேகமாக இயக்கியதில் எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த அன்னபூரணி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அன்னபூரணி இறந்தார்.

இதுகுறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News