உள்ளூர் செய்திகள்
மத்திய அரசின் கடும் முயற்சியால் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்- கவர்னர் தமிழிசை பெருமிதம்
மத்திய அரசோடு இணைந்து, மாநில அரசும் இணைந்து மாணவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இந்தியாவில் இருந்து மாணவர்கள் உள்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உக்ரைன் நாட்டு எல்லைகளில் உள்ள நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். புதுவையிலிருந்து மருத்துவம் படிக்க சென்ற 23 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர்.
நேற்று நள்ளிரவில் தமிழகத்தை சேர்ந்தவர்களோடு புதுவையை சேர்ந்த மாணவி ரோஜாசிவமணி நாடு திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த ரோஜா சிவமணி, தமிழகத்தை சேர்ந்த மாணவர்களோடு திரும்பி வந்துள்ளார். மத்திய அரசின் கடுமையான முயற்சியால் இந்தியர்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மாணவி 6-ம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். 2 மாதத்தில் தன் படிப்பை நிறைவு செய்திருப்பார். அதற்குள் போர் வந்துவிட்டது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது.
புதுவையில் இருந்து சென்ற 23 மாணவர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.
புதுவை அரசு வெளியுறவுத்துறையிடம் தொடர்புகொண்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ள பிரதமருக்கு நன்றி.
இந்தியர்களை மீட்க 26 விமானங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளது. 4 மந்திரிகளை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் ஈடுபடுத்தியுள்ளார்.
‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டம் மிக சிறப்பாக, மனிதாபிமானத்தோடு இந்தியர்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இது மனநிம்மதியை தருகிறது.
உக்ரைனில் போர் சூழல் கவலை அளிக்கிறது. அனைத்து மாணவர்களும் வந்து சேர்ந்தால்தான் மிகவும் ஆறுதலாக இருக்கும். மத்திய அரசோடு இணைந்து, மாநில அரசும் இணைந்து மாணவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இந்தியாவில் இருந்து மாணவர்கள் உள்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உக்ரைன் நாட்டு எல்லைகளில் உள்ள நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். புதுவையிலிருந்து மருத்துவம் படிக்க சென்ற 23 மாணவர்கள் உக்ரைனில் சிக்கி உள்ளனர்.
நேற்று நள்ளிரவில் தமிழகத்தை சேர்ந்தவர்களோடு புதுவையை சேர்ந்த மாணவி ரோஜாசிவமணி நாடு திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த ரோஜா சிவமணி, தமிழகத்தை சேர்ந்த மாணவர்களோடு திரும்பி வந்துள்ளார். மத்திய அரசின் கடுமையான முயற்சியால் இந்தியர்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மாணவி 6-ம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். 2 மாதத்தில் தன் படிப்பை நிறைவு செய்திருப்பார். அதற்குள் போர் வந்துவிட்டது. அவர் பத்திரமாக மீட்கப்பட்டது மகிழ்ச்சி தருகிறது.
புதுவையில் இருந்து சென்ற 23 மாணவர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது.
புதுவை அரசு வெளியுறவுத்துறையிடம் தொடர்புகொண்டு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ள பிரதமருக்கு நன்றி.
இந்தியர்களை மீட்க 26 விமானங்களுக்கு மேல் இயக்கப்பட்டுள்ளது. 4 மந்திரிகளை உக்ரைன் எல்லை நாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் ஈடுபடுத்தியுள்ளார்.
‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டம் மிக சிறப்பாக, மனிதாபிமானத்தோடு இந்தியர்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நிலையில் இயங்கி கொண்டிருக்கிறது. இது மனநிம்மதியை தருகிறது.
உக்ரைனில் போர் சூழல் கவலை அளிக்கிறது. அனைத்து மாணவர்களும் வந்து சேர்ந்தால்தான் மிகவும் ஆறுதலாக இருக்கும். மத்திய அரசோடு இணைந்து, மாநில அரசும் இணைந்து மாணவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.