உள்ளூர் செய்திகள்
சட்டசபை உறுதிமொழிக்குழு ஆலோசனைக்கூட்டம்
புதுவை சட்டசபை உறுதிமொழி குழுவின் ஆலோ சனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது.
புதுச்சேரி:
சட்டசபை உறுதி மொழிக் குழு தலைவர் நேரு தலைமை வகித்தார். உறுப்பினர்கள் கென்னடி, ராமலிங்கம், ஏகேடி.ஆறுமுகம், அசோக் பாபு, சிவசங்கரன், சட்ட சபை செயலர் முனுசாமி, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு துறைகளில் முதல்&அமைச்சர், அமைச்சர்கள் சட்டப்பேரவையில் அறிவித்த நலத்திட்ட உறுதிமொழிகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.