உள்ளூர் செய்திகள்
உத்திரமேரூர் அருகே மணல் கடத்தியவர் கைது
உத்திரமேரூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி அருகே உத்திரமேரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாதமுனி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் விசாரித்தபோது அவர் உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி கிராமத்தை சேர்ந்த சீதாபதி(வயது 30) என்பது தெரியவந்தது. மணல் கடத்தியதை ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.