உள்ளூர் செய்திகள்
தற்கொலை

புதுவை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-03-01 15:27 IST   |   Update On 2022-03-01 15:27:00 IST
பங்கு சந்தையில் முதலீடு செய்ததில் ஏற்பட்ட நஷ்டத்தால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேதராப்பட்டு:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது குடும்பத்தோடு மதுரையில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் டேனியல் (வயது 31). இவர் பிள்ளைச்சாவடி அன்னை நகர் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து புதுவைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பொருளாதார ஆய்வு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது அறை திறக்கப்படாமல் இருந்தது. மேலும் தூர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் வந்து கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பிரவீன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

அந்த அறையில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கிருந்த மேஜையில் தன்னுடைய பெற்றோர் செல்போன் எண்ணை எழுதி வைத்திருந்தார். அதன் மூலம் போலீசார் அவரது தந்தை ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், புதுவையில் தங்கி புதுவை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிரவீன் டேனியல் பங்கு சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுவை பல்கலைக் கழக ஆய்வு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News