உள்ளூர் செய்திகள்
தென்னிந்திய குதிரையேற்ற போட்டிகள் தொடங்கியது
தென்னிந்திய குதிரையேற்ற போட்டிகள் ஆரோவில்லில் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்துள்ள ஆரோவில்லில் ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளியில் 22-வது தென்னிந்திய குதிரையேற்ற போட்டி 1-ந்தேதி தொடங்கியது.
முதல் நாளான இன்று தனி அணிவகுப்பு, நடைபயிற்சி பிரிவில் போட்டிகள் நடந்தன. பெங்களூரு, புனே, தமிழகத்தின் ஊட்டி, தூத்துக்குடி, ஆம்பூர், கோவை, திருப்பூர்,சேலம், புதுவையில் இருந்து 110 குதிரையேற்ற வீரர்களும், 130 குதிரைகளும் பங்கேற்றன.
1-ந்தேதி முதல் 6&ந்தேதி வரை போட்டிகள் நடக்கிறது. குதிரைகளின் அலங்கார நடைப்போட்டி, தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்று திறமைகளை காண்பிக்கின்றனர்.
போட்டியில் பங்கேற்கும் குறைந்த வயது போட்டியாளருக்கு வயது 6. இதில் உள்நாட்டு, வெளி நாட்டு வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் காவல்துறையின் ஒரு பெண் உள்பட 6 வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்