உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு-ரங்கசாமி உறுதி

Published On 2022-03-01 08:00 GMT   |   Update On 2022-03-01 08:00 GMT
கல்லூரி பேராசிரியர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி:

புதுவை சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 16-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தினர்.

கடந்த வாரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங் கினர். இதையடுத்து கே.எஸ். பி.ரமேஷ் எம்.எல்.ஏ.   பேச்சுவார்த்தை நடத்தி  முதல்&அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இதையடுத்து சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். பதவி உயர்வு, வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உயர்வு ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவிட்டார். அதிகாரிகள் ஓரிருவாரத்தில் நிறைவேற்றுவதாக தெரிவித்தனர். 

கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும் என ரங்கசாமி உறுதியளித்தார்.
Tags:    

Similar News