உள்ளூர் செய்திகள்
தமிழக அரசை கண்டித்து கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த கா

அ.தி.மு.க.வை அழிக்க முடியாது-அன்பழகன் பேச்சு

Published On 2022-02-28 14:48 IST   |   Update On 2022-02-28 14:48:00 IST
பொய்வழக்கு அடக்குமுறையால் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்று அன்பழகன் பேசினார்.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் தமிழக தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து அண்ணாசிலை அருகே கண்டன  ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், இணை செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேசியதாவது: -

தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொய்யான  வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களை திசைத்திருப்பும் விதத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு  போட்டு வருகிறது. தி.மு.க.வின் பொய்யான அறிவிப்புகளை அ.தி.மு.க. தலைவர்கள் மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.

இதனால் அவர்கள்  மீது திட்டமிட்டு தி.மு.க. அரசு பொய்வழக்கு தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஒட்டு போட்ட தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தியதால்  முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் மீது பொய்வழக்கு போட்டு காவலில் வைத்துள்ளனர். இது ஆட்சி அதிகாரத்தின் பழிவாங்கும் உச்சக்கட்ட செயலாகும். 

தமிழகத்தில் 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க.வை பழிவாங்கும் எந்த செயலையும் செய்த தில்லை. பொய் வழக்கு  அடக்கு முறையால் அ.தி.மு.க.வை யாரும் அழித்து விட முடியாது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளர்கள் எதிர்காலத்தில் தி.மு.க.வுக்கு சரியான  பாடம் புகட்டுவார்கள். பொய் வழக்குகளினால் அ.தி.மு.க.வை அழித்து விட நினைக்கும் தி.மு.க.வின் கனவு பலிக்காது. 

இவ்வாறு அவர் பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர்கள்  கணேசன், திருநாவுக்கரசு, துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, துணை செயலாளர்கள்  முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, எம்.ஏ.கே.கருணாநிதி, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர் அன்பழக உடையார், மூர்த்தி,   ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, மாணவரணி செயலாளர் பிரதீப், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், இலக்கிய அணி செயலாளர் ராமசாமி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Similar News