உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுச்சேரியில் 9 பேருக்கு கொரோனா

Published On 2022-02-28 14:36 IST   |   Update On 2022-02-28 14:36:00 IST
புதுவையில் 9 பேருக்கு கொரோனா மற்றும் பிராந்தியங்களில் தொற்று இல்லை.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் 27-ந் தேதி 871 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் புதுவையில மட்டும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் தொற்று பாதிப்பு இல்லை. இதேபோல் ஜிப்மர், அரசு மருத்துவமனைகளில் தொற்றால் பாதித்தவர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 4 பேரும், கோவிட் கேர் சென்டரில் 5 பேர் மட்டுமே உள்ளனர்.தற்போது கொரோனா பாதித்தவர்களில் 12 பேர் மருத்துவமனையிலும், 106 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக 118 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

33 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு ஏதும் இல்லை. புதுவை  மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 640 பேர் குணமடைந்துள்ளனர். 

1962 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புதுவையை தவிர வேறு பிராந்தியங்களில் தொற்று பாதித்தவர் யாரும் இல்லாதது பொது மக்களிடையே சற்று நிம்ம தியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News