உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி பலியான முருகன்.

மின்சாரம் தாக்கியதில் பிப்டிக் ஊழியர் பரிதாப சாவு

Published On 2022-02-28 14:30 IST   |   Update On 2022-02-28 14:30:00 IST
அரியாங்குப்பத்தில் மின்சாரம் தாக்கியதில் பிப்டிக் ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:

அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் முருகன்(வயது46). இவர் பிப்டிக் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

முருகன் அதேபகுதியில் புதிதாக வீடு கட்டி கடந்த 11&ந் தேதி  கிரகபிரவேச விழா நடத்தினார். புதிதாக கட்டிய வீட்டில் சிறுசிறு வேலைகள் முடிக்காமல் இருந்தது. நேற்று அந்த வீட்டில் புதிதாக இரும்பு கேட் கதவு பதிக்கப்பட்டது.

இந்த நிலையில்  முருகன் புதிதாக பதிக்கப்பட்ட இரும்பு கேட்டில் தண்ணீர் ஊற்றினார். அப்போது இரும்பு கேட்டில் மின்கசிவு இருந்ததால் முருகனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அரியாங் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News