உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வழித்துணை நாதர் கோவில் கொடியேற்றம்

Published On 2022-02-28 12:11 IST   |   Update On 2022-02-28 12:11:00 IST
வழித்துணை நாதர் கோவிலில் கோமாதா பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மிகவும் பழமை வாய்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரசோழன் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு மரகதவல்லி சமேத மார்க்க ஈஸ்வரர் வழித்துணை நாதர் கோவிலில் மகாசிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கோமாதா பூஜையுடன் கொடியேற்றம் தொடங்கப்பட்டது.

இதில் இருபத்தி நான்கு நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று உற்சவ மூர்த்திகள் வீதி உலா வர உள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் சிவபூஜை செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் வழங்கி பிரசாதம் வழங்கப்படும். 

கோவில் அர்ச்சகர் ஜெயஸ்ரீ சிவலோகநாதர், ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள் ஊராட்சி மன்ற தலைவர், ஊர் பொதுமக்கள் கூடி கோயில் பிரகாரத்தை சுற்றிலும் உழவாரப் பணிகள் நடைபெற்று, பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இக்கோவிலில் சிவனும், பார்வதியும் இணைபிரியாமல் இருப்பதால் நாயகனைப்பிரியாள் எனும் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News