உள்ளூர் செய்திகள்
வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் புதுவை தாவரவியல் பூங்கா.

வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் புதுச்சேரி தாவரவியல் பூங்கா

Published On 2022-02-28 10:25 IST   |   Update On 2022-02-28 10:25:00 IST
வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் புதுவை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை அரசின் வேளாண் துறையின் சார்பில் தாவரவியல் பூங்காவில் கடந்த 1978 முதல் ஆண்டுதோறும் மலர், காய் மற்றும் கனிகள் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் கண்காட்சி நடத்தப்படவில்லை. கடந்தாண்டு  கண்காட்சிக்கு பதில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மலர் உற்பத்தி, காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள் சிறிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியை மனதில் கொண்டு, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ரூ.1.15 லட்சம் செலவில் மலர் கண்காட்சிக்காக செடிகள் உற்பத்தி செய்யப் பட்டன. 

வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். மலர் கண்காட்சிக்கு ரூ.70 லட்சம் வரை செலவாகும். நிதி நெருக்கடி, கொரோனா பரவல் காரண மாக புதுவை அரசு மலர் கண்காட்சி நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. 

தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் மலர் கண்காட்சிக்காக லாஸ்பேட்டை அசோக் நகரில் உள்ள மலர்செடிகள் மையத்தில் உருவாக்கப்பட்ட மலர் செடிகள்  பூத்து குலுங்க தொடங்கி உள்ளது. இந்த மலர் செடிகளை தாவரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தும் பணியை தோட்டக்கலை பிரிவு மேற்கொண்டது.

இதன் காரணமாக தாவரவியல் பூங்கா வண்ண மலர்களாக காட்சி தருகிறது.  இதனால், தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலர்களின் அருகே சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிழக்கு கடற்கரைசாலை யில் அமைந்துள்ள ஒரே தாவரவியல் பூங்கா என்ற பெருமை கொண்டது புதுவை தாவரவியல் பூங்காவாகும். 1826-ம் ஆண்டு இந்த பூங்கா பிரெஞ்சுக்காரர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

Similar News