உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு ஓம்சக்தி சேகர் அன்னதானம் வழங்கிய காட்சி.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அன்னதானம்

Published On 2022-02-27 14:03 IST   |   Update On 2022-02-27 14:03:00 IST
மேட்டுப்பாளையத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு ஒம்சக்தி சேகர் அன்னதானம் வழங்கினார்.
புதுச்சேரி:

ஜெயலலிதாவின்  74-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கதிர்காமம், இந்திரா நகர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் தொகுதி  செயலாளர்கள் கதிர்காமம் வேலவன், இந்திரா நகர் ஆனந்தன் ஆகியோரின் ஏற்பாட்டில்  மேட்டுப்பாளையம் சிக்னல் அருகில் நடைபெற்றது. 

விழாவில் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமை தாங்கி அ.தி.மு.க. கொடி ஏற்றி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் மாநில அவைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ், மாநில இணை செயலாளர் காசிநாதன், மாநில துணை தலைவர் நந்தன், மாநில துணை செயலாளர் நாகமணி, சதாசிவம், மாநில பொருளாளர் சங்கர்,மாநில இளைஞர்அணி செயலாளர் விக்னேஷ்,மாநில அண்ணா தொழிற்சங்க செயலாளர் மலை. செல்வராஜ், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் குணசேகரன்,மாநில மகளிரணி செயலாளர் வெரோனிகா, மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் லட்சுமணன் மற்றும் பலர் பங்கேற்றனர்

Similar News