உள்ளூர் செய்திகள்
திருநள்ளாறு நள நாராயணப்பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம்
திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் தர்பாராண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த நளபுரநாயகி சமேத நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் தர்பாராண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த நளபுரநாயகி சமேத நளநாராயணப்பெருமாள் கோவில் 5 நாள் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அப்போது ஸ்ரீதேவி, பூதேவியார் சமேத நளநாரா யணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடி கம்பம் அருகே எழுந்தருளச் செய்யப்பட்டார். தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேத மந்திரங்கள் ரிறி கொடிக் கம்பத்தில் கருடக்கொடியை எற்றி வைத்தனர். பின்னர், சுவாமிக்கும், கொடி கம்பத் திற்கும் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.
நேற்று காலை பெரு மாளுக்கு திருமஞ்சனமும் ஹம்ச வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா புறப்பாடும், இன்று (26-ந் தேதி) காலை திருமஞ்சனமும் நடந்தது.மாலை சேஷ வாகனத்தில் வைகுந்தராகவும், நாளை (27-ந் தேதி) காலை திருமஞ் சனமும், மாலை கருடசேவை யாகவும் பெருமாள் புறப்பாடு செய்யப்படுகிறது.
28ந் தேதி காலை தேரில் பெருமாள் நளதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிற்பகல் திருக்கல்யாண உத்ஸவமும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சனீஸ்வரர் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.