உள்ளூர் செய்திகள்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர் மதன்ராஜின் பெற்றோரை வையாபுரி மணிகண்டன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாணவரின் பெற்றோருக்கு வையாபுரி மணிகண்டன் ஆறுதல்

Published On 2022-02-26 12:00 IST   |   Update On 2022-02-26 12:00:00 IST
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவரின் பெற்றோருக்கு வையாபுரி மணிகண்டன் ஆறுதல் கூறினார்.
புதுச்சேரி:

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் உலகம் முழுவதும் மிகுந்த பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் போரின் காரணமாக இந்தியாவில் இருந்து படிப்பதற்காகவும், பணி நிமித்தமாகவும் உக்ரைன் நாட்டுக்கு சென்ற இந்தியர்கள் பரிதவித்து வருகின்றனர். 

புதுவை மாநிலத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிலாளர்கள் உக்ரைன் நாட்டில் சிக்கி,  மீண்டும் தாயகம்  திரும்பமுடியாமல் தவித்து வருகின்றனர். 

முத்தியால்பேட்டை தேவகி நகரை சேர்ந்த மதன்ராஜ் என்ற மாணவர் உக்ரைன் நாட்டில் மருத்துவப்படிப்புக்காக சென்றிருந்தார். அவரும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். 

இதையறிந்த கிழக்கு மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும்,, முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன்  மாணவரின் வீட்டுக்கு நேரில் சென்று, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

உக்ரைனில் மாணவர் பாதுகாப்பாக உள்ளாரா? உணவு உட்பட அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா? இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்துள்ளாரா? என கேட்டறிந்தார். 

மாணவர் மதன்ராஜ் உட்பட புதுவை மாநிலத்தை சேர்ந்த உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் மீட்க அ.தி.மு.க. சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மாணவர்களின் பட்டியலை அ.தி.மு.க. முன்னாள் முதல்&அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்படி பழனிசாமி ஆகியோரிடம் அளித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு அ.தி.மு.க. சார்பில் அழுத்தம் தரவும், மாணவர்கள், தொழிலாளர்களை மீட்டு அழைத்துவரவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வையாபுரி மணிகண்டன் உறுதியளித்தார்.

Similar News