உள்ளூர் செய்திகள்
பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்கா
கிருமாம்பாக்கத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் சிறுவர் பூங்கா அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் மந்தை வெளி திடலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இந்திரா காந்தி சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் சிறியவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கான சாதனங்களும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா 2 ஆண்டு காலத்திற்கு பிறகு பராமரிப்பின்றி முட்புதர்களும் குப்பைகளும் குவிந்துள்ளது.
மேலும் பூங்காவை சுற்றி நடப்பட்ட மரக்கன்றுகள் பெரும்பாலானவை அழிந்துவிட்டன. இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்து வருகிற து.
மேலும் குடிநீர் வசதியும் ஏற்படுத்தித்தரவில்லை. மின்விளக்குகள் பழுதாகி காணப்படுகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தும் விதமாக இந்த பூங்காவை பராமரித்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.