உள்ளூர் செய்திகள்
கைது

மூலக்குளம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேர் கைது

Published On 2022-02-25 16:10 IST   |   Update On 2022-02-25 16:10:00 IST
மூலக்குளம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலகுளம் மேட்டுப்பாளையம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் லாரிகள் நிறுத்தும் முனையம் அருகே உள்ள தனியார் மதுபான கடை அருகே குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் எஸ் ஐ கலையரசன் தலைமையில்லான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது 26 மற்றும் வானர பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் வயது 28 மற்றும் உருளையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் வயது 29 என்பதும் விசாரணையில் தெரியவந்தது  அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News