உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் 14 பேருக்கு கொரோனா

Published On 2022-02-25 15:05 IST   |   Update On 2022-02-25 15:05:00 IST
புதுவையில் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 12, ஏனாமில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 15, காரைக்காலில் 2, மாகியில் 2 பேர் என 19 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 26, காரைக்காலில் 11, மாகியில் 2 பேர் என 39 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 690 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63  ஆயிரத்து 528 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர். புதுவையில் 105, காரைக்காலில் 64, ஏனாமில் 9, மாகியில் 5 பேர் என 183 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 202 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். 

மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 960 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உள்பட 15 லட்சத்து 85 ஆயிரத்து 584 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Similar News