உள்ளூர் செய்திகள்
சுகாதார ஊழியர்கள் போராட்டம் நடத்திய காட்சி.

சுகாதார ஊழியர்கள் 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-02-24 12:57 IST   |   Update On 2022-02-24 12:57:00 IST
சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:

புதுவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை,  ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை,  இ.எஸ்.ஐ. மருத்துவமனை,  கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

அரசு பொது மருத்துவ மனையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மத்திய கூட்டமைப்புத் தலைவர் அன்பு செல்வன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். 

முன்னதாக சுகாதார ஊழியரும், மத்திய கூட்ட மைப்பு பொருளாளரும், சுகாதார ஊழியர் கடன் சங்கத் தலைவருமாகிய கணபதி  மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி  செலுத்தப்பட்டது.

சுகாதார ஊழியர் மத்திய கூட்டமைப்பு நிர்வாகிகள் பாக்கியவதி அனுராதா, சாந்தி, பிரபாவதி, ஜான்சி கதிர்வேல், விஜயகுமார், ராஜ்குமார்,  இளங்கோ விஜய முருகன், தனசேகரன் நந்தகுமார் லட்சுமி உட்பட அனைத்து பணி பிரிவு ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேசிய சுகாதார இயக்கம் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். செவிலியர் படி, நோயாளி பராமரிப்பு படி உள்ளிட்ட உயர்த்தப்பட்ட அலவன்ஸ்களை  வழங்க வேண்டும்.

மேலும் அனுப்பாமல் காலம் கடத்தும் சுகாதாரத் துறை நிர்வாகத்தை கண்டிக்கும் வகையிலும் மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு நியமன விதிகளில் திருத்தம் பணி கட்டமைப்பு மாற்றி அமைக்க வேண்டும். உயர்த்தப்பட்ட சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும். தகுதி உள்ளவர் களுக்கு பழைய பென்சன் திட்டத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Similar News