உள்ளூர் செய்திகள்
சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை மேல் சாத்தமங்கலம் ஏரிக்கரை மெயின் ரோடு அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர் சந்தேகப்படும்படி நின்றுக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மேல்சாத்த மங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வசந்த் என்ற வசந்தராஜ்(வயது25) என்பதும், மற்றொருவர் சென்னையை சேர்ந்த செல்வா (25) என்பதும், இவர்கள் இருவரும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.