உள்ளூர் செய்திகள்
100 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு
புதுவை தொழில்நுட்ப பல்கலையில் 100 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் 5-ந் தேதி தொடங்குகிறது
புதுச்சேரி:
புதுவையில் நிபுணா சேவா இன்டர்நேஷனல் சார்பில் லோகேஷ்வர ஆராதனா நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் 2022 புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 5 மற்றும் 6-ந் தேதி நடக்கிறது.
முகாம் தொடர்பான அறிமுகம், கையேடு வெளியீடு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது. முகாம் செலவுக்காக புதுவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். அவரை கவர்னர் தமிழிசை பாராட்டினார்.
தொடர்ந்து முகாம் கையேடை வெளியிட்டு கவர்னர் தமிழிசை பேசிய தாவது:-
ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் ஒன்றிணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். திருவிழா போல் நடந்த முகாமில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. இந்த முகாமில் 144 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதேபோல புதுவையிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என இளைஞர்களிடம் கோரிக்கை வைத்தேன். இதையேற்று வருகிற 5, 6-ந் தேதிகளில் புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். முகாமில், 100 பெரிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
புதுவையில் உள்ள திறமையான, படித்த இளைஞர்கள், மாணவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் பங்கேற்க பதிவு செய்து கொள்ள வேண்டும். இளைஞர்கள், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண் டும் என பல்வேறு நடவடிக் கைகளை அரசு எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
கவர்னரின் முயற்சியால் புதுவையில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அரசுக்கு எந்த செலவும் இல்லாமல் முகாம் நடத்தப்படுகிறது. படித்த இளைஞர்கள், வேலையின்றி சிரமப்படுகின்றனர். அவர்கள் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது,
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். தனியார் பங்களிப்போடு நடைபெறும் இந்த முகாம் மூலம் பொறியியல், கலை, அறிவியல் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலைவாய்ப்பு முகாமை தனது முயற்சியால் நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உரு வாக்கித்தர முன்வந்துள்ள கவர்னருக்கும், நிறுவ னங்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
முன்னதாக வேலை வாய்ப்பு முகாம் கையேட்டை கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வெளியிட்டனர்.