உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பேனர்களை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு- நாம் தமிழர் கட்சி அறிவிப்பு

Published On 2022-02-23 13:33 IST   |   Update On 2022-02-23 13:33:00 IST
பேனர்களை அகற்றக்கோரி மீண்டும் ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளோம் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
புதுச்சேரி:

நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பாசறை செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் பெருகி வருகிறது. நகராட்சி அனுமதி பெறாமல் அரசுக்கு வருமானம்  இழப்பு, பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் விதமாக பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் 5.8.2021-ல் வழக்கு தொடரப்பட்டது. 

ஐகோர்ட்டு நீதிபதிகள், மாநிலம் முழுவதும் பேனர் களை உடனே அகற்ற 1.10.2021-ல் உத்தரவிட்டனர். புதுவை கலெக்டரின் பேனர் அகற்றும் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் ஐகோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் இருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

இந்த பேனர்களை உடனடியாக அகற்றக்கோரி மீண்டும் ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News