உள்ளூர் செய்திகள்
சட்டசபையில் அமைதிகாத்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள்
சட்டசபை கூட்டத்தில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்.
புதுச்சேரி :
புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க சட்டசபையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும் என தி.மு.க.&காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மாக எழுந்து வலியுறுத்தினர்.
அப்போது பிரதமரின் பெஸ்ட் புதுவை அறிவிப்பு என்ன ஆச்சு? அரசின் தேர்தல் வாக்குறுதி, சட்ட மன்ற வாக்குறுதிகள் என்ன ஆச்சு? மாநில அந்தஸ்து என்ன ஆச்சு? என பல கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதிலளித்தார். அதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்து, அமைச்சர்களிடம் பதில் பெற்றுத்தரும்படி வலியுறுத்தினர். ஆனால் ஆளும்கட்சி வரிசையில் எந்த அசைவும் இல்லை.
கடந்த காலங்களில் எதிர் கட்சிகள் அரசை விமர் சிக்கும்போது, ஆளும்கட்சி தரப்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்வார்கள். இதனால் சபையில் பெரும் அமளி நிலவும்.
ஆனால் இன்றைய கூட்டத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்&பா.ஜனதா தரப்பில் எந்த பதிலும், வாக்குவாதமும் செய்யாமல் மவுனமாக அமைதி காத்தனர்.