உள்ளூர் செய்திகள்
அரசு கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிறுத்தி வைப்பு

Published On 2022-02-22 12:43 IST   |   Update On 2022-02-22 12:43:00 IST
திருமருகல் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப் பூதனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

இந்த கொள்முதல் நிலையத்தில் அதிக அளவில் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.மேலும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நெல் கொள்முதல் நிலையங் களில் ஏற்படும் தவறுகளை சரி செய்யும்படி உத்தர விட்டுள்ளார்.
 
அதன் பேரில் தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலைய அலுவலக உதவியாளர் சுப்புரத்தினம், கொள்முதல் இயக்க துணை மேலாளர் ரங்கநாதன், கொள்முதல் தரக்கட்டுப்பாடு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அரசு அறிவித்த படி 40 கிலோ 650 கிராம் எடைக்கு மாறாக 42 கிலோ வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் அளவைவிட அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டிருந்ததால் அதிகாரிகள் தற்காலிகமாக நெல் கொள்முதலை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டனர். 
மேலும் துறை சார்ந்த தவறுகள் சரி செய்யப்பட்டது கொள்முதல் வழக்கம்போல் நடைபெறும் எனவும் விவசாயிகளிடம் கூறிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் கூறிய தாவது:
மேலப்பூதனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் நெல் வியாபாரி களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.

அந்த ஆய்வின் போது 40 கிலோ 650 கிராம் தான் ஒரு மூட்டை எடை இருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக 42 கிலோ, 42 கிலோ 200 கிராம் என அதிக எடை கொண்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வரிசை படி கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் விருப்பப்படி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தவறுகளை தற்போது அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி உள்ளோம். மேலும் ஒரு விவசாயிடம் எந்த அளவிற்கு நெல்லை கொள்முதல் செய்யப்பட வேண்டுமோ அதைவிட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது. 
இதனை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Similar News